இந்தியாவில் 9 துறைகளில் வேலைவாய்ப்புகள் சராசரியாக 29% உயர்ந்திருப்பதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
உற்பத்தி, கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், உணவகங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதிச்சேவைகள் ஆகிய துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் வேலைவாய்ப்புகள் 29% உயர்ந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில் அதிகபட்சமாக 152% வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. மருத்துவ சேவைகள் துறையில் 77 சதவிகிதமும் போக்குவரத்து துறையில் 68 சதவிகிதமும் நிதிச்சேவைகள் துறையில் 48 சதவிகிதமும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கட்டுமானத்துறையில் 42 சதவிகிதமும் கல்வித்துறையில் 39 சதவிகிதமும் உற்பத்தி துறையில் 22 சதவிகிதமும் வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளன.
 
image
2013-14ஆம் ஆண்டு பொருளாதார கணக்கெடுப்பு புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு இவ்விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்தாண்டில் மார்ச் 25 முதல் ஜூன் 20 வரையிலான தேசிய பொது முடக்க காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறையாக கட்டுமானத்துறை திகழ்கிறது. இதில் 6.7% பேர் ஊதியமின்றி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அடுத்தபடியாக உணவகம் மற்றும் விருந்தோம்பல் துறையில் 4.9% பேர் ஊதியமற்ற நிலைக்கு ஆளாகினர். மருத்துவத்துறையில் மிகவும் குறைந்த பட்சமாக 0.2 சதவிகிதத்தினரே பாதிக்கப்பட்டனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.