தலிபான்களுடன் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளின் சிறப்பு தூதர்கள் காபூலில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தற்போது தற்காலிக அரசு நிர்வகித்து வரும் நிலையில் அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய முழுமையான அரசை அமைப்பது குறித்து இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னாள் பிரதமர் ஹமீது கர்சாய், முன்னாள் அமைச்சர் அப்துல்லா ஆகியோருடனும் 3 நாட்டு தூதர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை உலக நாடுகள் செய்து தர வேண்டும் என இந்த 3 நாடுகளும் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தன. ஆப்கானிஸ்தானின் தற்போதைய சமூக, பொருளாதார பாதிப்புகளுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளுமே காரணம் என இம்மூன்று நாடுகளும் குற்றஞ்சாட்டியிருந்தன.
இதையும் படிக்க: ஐ.நா.வில் பேச அனுமதிக்க வேண்டும் – தலிபான்கள் கோரிக்கை