இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,945 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் உயிரிழந்துள்ளனர். 18ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 281 பேர் உயிரிழந்த நிலையில் இன்றைய உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அதேபோல தினசரி தொற்று பாதிப்பும் கூடியுள்ளது.