ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தம்பதியர் கடந்த 15-ஆம் தேதியன்று இரட்டை பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். இதே நாளில் கடந்த 2019-இல் தங்களது இரண்டு பெண் குழந்தைகளை விபத்தில் பறிகொடுத்திருந்தனர் இந்த தம்பதியர். 

அந்த ஆண்டு கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதில் இந்த தம்பதியரின் இரண்டு பெண் குழந்தைகளும் அடங்குவர். இந்நிலையில் தங்களது குழந்தைகளை பறிக்கொடுத்த அதே நாளில் அவர்கள் இரட்டை பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனனர். 

“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். கடவுளால் கொடுத்த ஆசீர்வாதம் என இதை எண்ணுகிறோம்” என தம்பதியர் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்கலாம் : சர்ச்சையான ’AUKUS’ உடன்படிக்கை : அமெரிக்கா-ஆஸி.-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே என்ன சிக்கல்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.