கொரோனா தொற்று பரவல் அச்சத்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ரத்து செய்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில் இதற்கு காரணம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புத்தக வெளியீட்டு விழா என்ற விமர்சனங்களும் எழுந்தன. 

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலிப் தோஷியும் அந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் அந்த விழா நடந்துள்ளது. 

“நானும் அந்த புத்தக விழாவிற்கு சென்றிருந்தேன். ஹோட்டல் நிர்வாகம் எனக்கு அழைப்பு விடுத்திருந்தது. அங்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர். வீரர்கள், பயிற்சியாளர்கள் என யாரும் மாஸ்க் அணியவில்லை. அதை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என குற்றச்சாட்டு வைத்துள்ளார் திலிப் தோஷி. 

அதே நேரத்தில் ஐபிஎல் தொடரை மனதில் கொண்டு இந்த போட்டி ரத்து செய்ய இந்தியா முனைந்ததாகவும் அவர் சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிக்கலாம் : உலக அரங்கில் ’கீழடி’ : யார் இந்த அமர்நாத் ராமகிருஷ்ணன்? தமிழகத்தில் இவ்வளவு வரவேற்பு ஏன்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.