உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினருடன் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல், 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், ”உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டணிக் கட்சியினருடன் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் உள்ளாட்சி இடங்கள் பற்றி கலந்து பேசி சுமூக முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.