தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1580 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று 1608 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
1509 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 22 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் 16,522 பேர் தற்போது உள்ளனர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 26,35,419 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் 204 பேர், சென்னையில் 185 பேர், ஈரோட்டில் 137 பேர், தஞ்சாவூரில் 109 பேர், செங்கல்பட்டில் 105 பேர், திருப்பூரில் 84 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாம் : “விளாதிமீர் புதின்” என மகனுக்கு பெயர் வைத்த ஸ்வீடன் தம்பதி – பதிவு செய்ய மறுத்த அதிகாரிகள்