தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில், இன்று முதல் 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: வழக்கமான உற்சாகத்துடன் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற சதுர்த்தி விழா