தரமற்ற உணவு பரிமாறப்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செயல்படும் ஒரு உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகே இயங்கி வரும் உணவகத்தில் கடந்த சில மாதங்களாக நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதாக தொடர் புகார் எழுந்தன. இதையடுத்து நேற்று உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது உறுதியானதை அடுத்து உணவகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.