தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் 1630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பு 1652 என இருந்தது. தலைநகர் சென்னையில் 177 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது என மருத்துவ துறை தெரிவித்துள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
1827 பேர் நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது 19,171 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.