தமிழ்நாட்டில் இன்று 1797 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 1804 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தலைநகர் சென்னையில் 198 பேருக்கு இன்று தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோய் தொற்று பாதிப்பில் இருந்து 1908 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 210 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு (108), சேலம் (103), தஞ்சாவூர் (109) மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிப்பு.