கேரளாவில் வரதட்சணை விவகாரத்தால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரதட்சணை கொடுமையை ஒழிக்க அம்மாநில அரசு புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி அரசாங்க வேலை செய்து வரும் ஆண் ஊழியர்கள் அனைவரும் ‘வரதட்சணை வாங்கவில்லை’ என்ற உறுதிமொழி பத்திரத்தை சம்மந்தப்பட்ட  ஊழியர்கள் அவர்களது தலைமை அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த பத்திரத்தை அதிகபட்சம் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி பத்திரத்தில் ஆண் ஊழியரின் மனைவி, தந்தை மற்றும் மாமனார் என மூவரது கையொப்பம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.