தலிபான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்து ஆப்கானிஸ்தான் அரசு

உலகில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். அங்கு தலிபான் பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களது நடமாட்டத்தை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது ஆப்கானிஸ்தான் அரசு. அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தலிபான் படையினரின் கை ஓங்க துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

“வன்முறையை கட்டுப்படுத்தவும், தலிபான் படையினரின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கிலும் நாட்டின் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 34 மாகாணங்கள் உள்ளன. அதில் மூன்று மாகாணங்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தலிபான் படையினரின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.