ஆஸ்திரேலியாவில் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் போதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஒரு மாதமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனினும் இங்கு தினசரி கொரோனா பாதிப்பு நாள்தோறும் இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இந்த மாத இறுதிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டால் பொதுமுடக்கத்தை தளர்த்துவதென அரசு முடிவு செய்தது.
ஆனால் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவுவதால் மேலும் சில வாரங்கள் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.