இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 262 ரன்களை குவித்தது. அதையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது இந்திய அணி.
தவான் மற்றும் பிருத்வி ஷா இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் 58 ரன்களுக்கு முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிருத்வி ஷா 43 ரன்களில் வெளியேற இஷான் கிஷன் களத்திற்கு வந்தார். கேப்டன் தவானுடன் 85 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடர்ந்து வந்த மணிஷ் பாண்டே 72 ரன்களுக்கு தவானுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
முடிவில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் தவான் 95 பந்துகளில் 86 ரன்கள் விளாசியிருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.