தமிழகத்தில் மேலும் 2,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,35,402 ஆக உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 29 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,724 ஆக உயர்ந்திருக்கிறது. தற்போது தமிழகத்தில்  கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது.

இன்று கொரோனா பாதிப்பிலிருந்து 2,743 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24,73,781 ஆக உள்ளது. இன்று 12 வயதுக்குட்பட்ட 128 சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.

image

சென்னையில் நேற்று 137 ஆக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, இன்று மீண்டும் 150 ஆக உயர்ந்திருக்கிறது. கோயம்புத்தூரில் 220 பேர், சேலத்தில் 142 பேர், ஈரோட்டில் 128 பேர் , திருப்பூரில்  121 பேர், தஞ்சையில் 120 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.