பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
சனிக்கிழமை காலை அபிஷேக அலங்கார பூஜைகளை முடித்து விட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அர்ச்சனை தீபாராதனை வேலைகளை கவனிக்க தொடங்கினார் அர்ச்சகர் முரளி. 26 வருடங்களாக இந்த வேலையில் இருப்பவர். 10 மணிக்கு அவரை சாப்பிட அனுப்ப அவருடைய மகன் அனந்து வந்தான்.
வழக்கமாக வரும் பக்தர் பழனியும் உள்ளே வந்தார் “அர்ச்சகரே, 100 ரூபாய்க்கு சில்லரை கிடைக்குமா.? ”
“நிச்சயமாக. ஒரு நிமிஷம் இருங்கோ” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். வரும் பொழுது கையில், ஒரு 50, ஒரு 20, இரண்டு 10, ஒரு 5, இரண்டு 2, ஒரு 1 ருபாய் கொடுத்தார். அவர் சென்ற பிறகு அனந்து கேட்டான் ” 100 ரூபாய்க்கு 2 அம்பது ரூபாயாக கொடுக்காம, எதுக்காக அத்தனை சில்லரை கொடுத்து விட்டீங்க? அப்படி கொடுத்தால் நமக்கும் அவர் 50 போட்டிருப்பார்.
” முரளி சொன்னார் ” அப்படி கொடுத்தால், நம்ம அவரை கட்டாயப்படுத்தின மாதிரி ஆகிடும். அவர் நம்ம தட்டுல போட்ற பணம், நம்ம பண்ற அர்ச்சனை மற்றும் நம்முடைய வேலைக்கானது. அவர் சில்லரை வாங்கிட்டு அதிலிருந்து 1 ருபாய் சந்தோஷமா கொடுத்தாலும் போதும். எப்பவுமே, நமக்கானது நம்மிடம் வரும். அதற்கான உழைப்பு போட்டா போதும். அடுத்தவரை நமக்கு சாதகமான முடிவெடுக்க முயற்சி பண்ணக் கூடாது. போய் தட்டத்தில் பார். அவர் 50 ருபாய் தான் போட்டுட்டு போயிருக்கார்.” யதார்த்தம் புரிந்தவனாக வேலையை ஆரம்பித்தான் அனந்து. பையனுக்கு ஒரு வாழ்க்கை பாடம் நடத்திய திருப்தியொடு சாப்பிட சென்றார் முரளி.
–அனந்தராமன் பாலமுரளி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.