இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி நடைமுறையை அமல் செய்தது. இந்த வரி நடைமுறை இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது குறித்து ட்வீட் செய்துள்ளார் பிரதமர் மோடி.
“ஜி.எஸ்.டி வரி இந்திய பொருளாதாரத்தின் மைல்கற்களில் ஒன்றாகும். இந்த வரி சாதாரண மனிதன் மீதான வரிச்சுமையை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இந்த வரி வசூலில் வெளிப்படத்தன்மையும் பின்பற்றப் படுகிறது” என மோடி ட்வீட் செய்துள்ளார் பிரதமர் மோடி.