உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாய 217 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. 

ரோகித் ஷர்மா மற்றும் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து ரோகித் 34 ரன்களிலும், கில் 28 ரன்களிலும் அவுட் ஆகினர். புஜாரா 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். கோலி மற்றும் ரகானே 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இருப்பினும் கோலியின் ஆங்கரிங் இன்னிங்ஸை ஆட்டம் காண வைத்தார் ஜேமிசன். கோலி 44 ரன்களில் வெளியேறினார். பின்னர் பண்ட் 4 ரன்களிலும், ரகானே 49 ரன்களிலும், அஷ்வின் 22 ரன்களிலும், இஷாந்த் 4 ரன்களிலும், பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும், ஜடேஜா 15 ரன்களிலும் அவட்டாகி வெளியேறினார். 92.1 ஓவரில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 217 ரன்களை எடுத்தது இந்தியா. 

நியூசிலாந்து அணி சார்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வேக்னர் மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சவுதி ஒரு விக்கெட் எடுத்தார். தற்போது நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி உள்ளது.   

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.