நடிகர் அக்‌ஷய் குமார் இன்று காஷ்மீரில் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடியதோடு, அவர்களுடன் நடனமாடி மகிழ்வித்திருக்கிறார். 

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார் தனி ஹெலிகாப்டர் மூலம் இன்று காஷ்மீரின் பாண்டிபோரா மாவட்டத்திலுள்ள குரேஸ் பள்ளத்தாக்கிற்கு சென்று எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களை சந்தித்து உரையாடினார்.

image

அவரது சந்திப்பில் ராணுவத்துறை அதிகாரிகளும் வீரர்களும் கலந்துகொண்டனர். அப்போது, வீரர்களுடன் நடனமாடி அக்ஷய் குமார் உற்சாகப்படுத்தினார். அதோடு, அப்பகுதியில் பள்ளி கட்ட 1 கோடி ரூபாய் நிதியுதவியும் அளித்திருக்கிறார்.


இதுகுறித்து, அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ”மறக்கமுடியாத நாள் இது. ராணுவ வீரர்கள்தான் எல்லையை பாதுகாக்கிறார்கள். நான்,  இங்கு வரும்போது மிகவும் தாழ்மையானவனாக இருப்பேன்.  உண்மையான ஹீரோக்களை சந்தித்திருக்கிறேன். என் இதயத்தில் மரியாதையை தவிர வேறொன்றுமில்லை” என்று கூறியிருக்கிறார். விரைவில் அக்‌ஷய் குமாரி ’பெல்பாட்டம்’ படம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.