தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தின் முடிவில் மூத்த நிர்வாகிகளை வைத்து மேலும் 20 நிமிடங்களுக்கு கூட்டம் நீட்டிக்கப்பட்டது.

<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. <a href=”https://t.co/EkhOSoHQJb”>pic.twitter.com/EkhOSoHQJb</a></p>&mdash; AIADMK (@AIADMKOfficial) <a href=”https://twitter.com/AIADMKOfficial/status/1404376543355281416?ref_src=twsrc%5Etfw”>June 14, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

கூட்டம் முடிந்தபிறகு நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் கொறடா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிமுக சட்டமன்ற கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற குழு பொருளாளராக கடம்பூர் ராஜுவும், குழு செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.சி அன்பழகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.