‘இந்தியாவின் பறக்கும் மனிதர்’ என அழைக்கப்படும் தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவர் இந்திய மகளிர் வாலிபால் அணியின் முன்னாள் கேப்டனும் கூட. அவருக்கு வயது 85. FORTIS மருத்துவமனையில் அவர் கொரோனா சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மில்கா சிங் தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1955இல் மில்கா சிங்கை இலங்கை சுற்றுப்பயணத்தில் சந்தித்தார் நிர்மல். இருவருக்குள்ளும் அதன் பிறகு காதல் மலர மண வாழ்க்கையில் இணைந்தனர். சர்வதேச வாலிபால் போட்டிகளில் சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு விளையாடியவர் நிர்மல்.
அவரது இறுதி சடங்கில் மில்கா சிங் பங்கேற்கவில்லை. இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.