“நான் தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எங்கள் குடும்பத்துக்கு, அத்தியாவசிய பொருட்கள் தேவை” – பழனி, திருவள்ளூர்
“நான் ஆதரவற்ற நபர். எனக்கு உணவு தேவைப்படுகிறது” – வெங்கடேசன், பெரம்பூர்
“நான் கொரோனா நோயாளி. வயது, 75 ஆகிறது. கவனித்துக் கொள்ள ஆளில்லை. சிகிச்சை அளிக்க ஹோம் நர்ஸ் தேவை” – சாண்டி மெர்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்
“அருகிலிருக்கும் ஒரு சிறு கம்பெனியில் வேலை செய்கிறேன். வேலை இல்லை இப்போது. இரண்டு குழந்தைகள் உள்ளது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தேவை” – வினோத், திருவள்ளூர்
“நான் ஆட்டோ ஓட்டுனர். என் குடும்பத்துக்கு உணவு, மளிகை தேவை” – பாண்டியன், திருவள்ளூர்
“தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறேன். வருமானம் மிகக்குறைவாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு உதவி தேவை” – விக்கி, திருவள்ளூர்
– புதிய தலைமுறையின் ‘துளிர்க்கும் நம்பிக்கை’ உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க… ‘புதிய தலைமுறை’ முன்னெடுப்பில் ‘துளிர்க்கும் நம்பிக்கை’