பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் களிமண் ஆடுகளங்களின் மைந்தனாக போற்றப்படும் ரஃபேல் நடாலை உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் வீழ்த்தினார்.

ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் பிரெஞ்ச் ஓபனில் 14-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் நடாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் நடாலை வீழ்த்தும் முனைப்பில் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர். ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் நடால் கைப்பற்றி அசத்தினார். சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி மிரள வைத்தார்.

image

3 ஆவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆட்டம் 5 சுற்றுகள் வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்காவது சுற்றையும் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிச் வெற்றியை வசப்படுத்தினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்தது. கடந்த 5 பிரெஞ்ச் ஓபன் தொடர்களில் நடாலை ஜோகோவிச் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

நாளை நடைபெறும் பிரமாண்ட இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.