மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று வீட்டில் வளர்க்கும் நாயை கடித்து தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புசே என்ற கிராமத்தில் வீட்டு வாசலில் படுத்திருக்கும் நாயை, பின்னால் இருந்து வரும் சிறுத்தை வாயில் கவ்விக் கொண்டு செல்வது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.