கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சீனாவில் சுதந்திரமான மற்றும் எத்தகைய தலையீடும் இல்லாத விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனாவைரஸ் முதன்முதலாக எங்கு உருவானது என்பது குறித்த விவரங்களை உலக நாடுகள் ஆராய்ந்துவரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அது சீனாவில் தோன்றியதாகவும், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. மேலும் இந்த வைரஸ் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டது எனவும் கூறிவரும் நிலையில் இதுகுறித்து சீனாவில் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சீனாவில் சுதந்திரமான மற்றும் எத்தகைய தலையீடும் இல்லாத விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு வெளிப்படையான பதில்கள் கிடைத்தால் மட்டுமே சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சீர்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போதுவரை அது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருப்பதால் சுதந்திரமான விசாரணை என்பது கட்டாய தேவையாக உள்ளதாக ஹேன்காக் கூறியுள்ளார்.