கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பெண் ஒருவர் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து மாயமாகி உள்ளார். தற்போது அவரது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் காதலனுடன் வசித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் அவரது காதலனின் பெற்றோருக்கே அந்த பெண் வீட்டில் இருப்பது தெரியாமல் இருவரும் ரகசியம் காத்துள்ளனர்.
கடந்த 2010இல் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆயலூர் கிராமத்தை சேர்ந்த அந்த பெண் தனது வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். அவர் மயமானதை தொடர்ந்து போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர் அந்த பெண்ணின் பெற்றோர். அதை தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தி உள்ளனர். இருப்பினும் அதற்கு எந்த பலனும் இல்லை.
2010 முதல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை அந்த பெண் காதலனின் வீட்டில் இருந்த அறையில் இருந்துள்ளார். அறையில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் யாருக்கும் தெரியாமல் காதலன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் அந்த பெண். அதே நாளன்று காதலனும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தொடர்ந்து காதலனின் பெற்றோர் தங்கள் மகனை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணும், காதலனும் பக்கத்து ஊரில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தற்செயலாக கவனித்த காதலனின் சகோதரர் இருவரையும் பிடித்து விசாரித்ததில் 11 ஆண்டுகளாக வீட்டில் ராகசியமாக வழந்தது அம்பலாமாகி உள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் தாங்கள் காதலித்ததை ரகசியமாக வைத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரும் சேர்ந்து வாழ அனுமதி கொடுத்துள்ளனர்.