கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் மருத்துவமனையில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்திலுள்ள  குல்பர்கா இன்ஸ்ட்டியூட் ஆஃப் சயின்ஸ் அரசு மருத்துவமனையில்தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இம்மருத்துவனையில் இறப்பவர்களின் உடல்களை ஏற்றிச்செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் பிண்டோ, நேற்றிரவு திடீரென கொரோனா சிகிச்சை மைய பெண்கள் வார்டுக்குள் புகுந்து 25 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய தனது ஆடைகளை கழற்றியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண்ணும், கொரோனா சிகிச்சையில் இருந்த மற்றப் பெண்ளும் சத்தம் போட்டு கத்தியுள்ளனர். பின்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் பிண்டோவை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தத் தகவலை ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்த பிரம்ஹாப்பூர் காவலர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.