பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி சார்பில் எம்.எல்.ஏ.க்களாக இருந்து வந்த சுக்பால் கைரா, பிர்மால் சிங், ஜெக்தேவ் சிங் கமாலு ஆகிய 3 பேரும் சமீப காலமாக கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருந்து வந்தனர். இவர்கள் 3 பேரும் நேற்று மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் முன்னிலையில் தங்களை காங்கிரசில் இணைத்துக்கொண்டனர். அவர்களை அமரீந்தர் சிங் வரவேற்றார்,

காங்கிரசில் இணைந்த 3 எம்.எல்.ஏ.க்களில் சுக்பால் கைரா ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் ஆவார். இவர் கடந்த 2015-ம் ஆண்டுதான் காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.