தமிழகத்தில் பராமரிப்புப் பணிக்கான மின்சார சேவை நிறுத்தம் செய்யப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது.

வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். தற்போது அந்த நேரம், 2 மணிநேரம் மட்டுமே என குறைக்கப்பட்டுள்ளது. பகல் 12 மணிக்குள் ஏதாவது இரண்டு மணிநேரம் பராமரிப்புப் பணிக்கு மின்சாரம் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணி மற்றும் வகுப்புகள் நடப்பதைக் கருதி மின்நிறுத்த நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.