கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் எந்தளவிற்கு தொற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது.
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் அதிகளவில் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்விரு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்ட 4 ஆயிரம் பேரைக் கொண்டு விரிவான ஆய்வு ஒன்றை ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொள்ள உள்ளது.
இதன் மூலம் தொற்று தீவிரமடைவது எந்தளவுக்கு தடுக்கப்படுகிறது என ஆய்வு செய்யப்படும் என ஐசிஎம்ஆர் விஞ்ஞானி தருண் பட்நாகர் தெரிவித்தார். இந்த ஆய்வு அடுத்த வாரம் தொடங்கும் என்றும் இது போன்ற ஆய்வு இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்றும் விஞ்ஞானி பட்நாகர் தெரிவித்தார்.