இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 55 ஆயிரத்து 102 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,741 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 99 ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா பாதிப்புடன் 28,05,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) வரையில் 19 கோடியே 50 லட்சத்து 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.