மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள வாட்கான் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை திருமணம் செய்து கொண்டது குற்றம் என சொல்லி அவருக்கு வினோதமான தண்டனையை தீர்ப்பாக சொல்லி உள்ளது அந்த கிராமத்தின் சாதி பஞ்சாயத்து.
அந்த பஞ்சாயத்தில் அந்த பெண்ணுக்கு தண்டனையாக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழைப்பழ தோளில் துப்பும் எச்சிலை நாக்கால் சுத்தம் செய்ய வேண்டும் என சொல்லியுள்ளனர். அப்போது அந்த பெண் பஞ்சாயத்து முன் இல்லை என தெரிகிறது. இந்த தண்டனை குறித்த விவரத்தை அவரது உறவினர்கள் மூலம் அவர் அறிந்து கொண்டுள்ளார்.
இருப்பினும் அதை செய்ய மறுத்ததோடு காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். விசாரணையில் பஞ்சாயத்து மீது தவறு இருப்பது உறுதியானது. அதனால் மக்களை சமூக புறக்கணிப்பில் இருந்து பாதுகாக்க உதவும் சட்டத்தின் கீழ் பத்து பேர் மேதகு வழக்கும் பதிவாகி உள்ளது.
தங்களது சாதிய வழக்கத்தின் படி இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குற்றம் என சொல்லி இந்த தண்டனையை பஞ்சாயத்தார்கள் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 2015இல் விவாகரத்து ஆகியுள்ளது. 2019இல் அவர் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிகர சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்துள்ளது.