ஆஸ்திரேலியா அரசு இந்தியாவிலிருந்து வரும் வான்வழி போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. இந்தியாவில் தீவிரமக பரவி வரும் இரண்டாவது கொரோனா அலையே இந்த தடைக்கு காரணம். இந்நிலையில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த 73 வயதான கேரி நியூமேன், தடையை நீக்குமாறு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்நிலையில் அவரது மனுவை விசாரித்து நீதிபதிகள் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிராகரித்துள்ளனர். 

கடந்த வாரம் கேரியின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை முதல் முறையாக விசாரித்த நீதிபதிகள் தேசத்தின் பாதுகாப்பே முக்கியம் என சொல்லி மனுவை நிராகரித்துள்ளனர். 

அதனால் வரும் 15ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் இருக்க வேண்டி உள்ளது. அதன் பிறகு தடை நீங்கியதும் அவர் ஆஸ்திரேலியா பறக்கலாம். அரசின் தடை உத்தரவை மீறி இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் வருபவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.