ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.

சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய், கொரோனா பாதிப்புக்குள்ளாகி, குஜராத்தின் பாவ்நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஏற்கனவே நீரிழிவு பாதிப்பு உள்ளது. காஞ்சிபாயின் உடல்நிலை மோசமான நிலையில் வென்டிலேட்டர்  உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ஒருநாள் முன்புதான் மருத்துவமனையில் சேதன் சகாரியா தனது தந்தையின் உடல்நிலையை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சில மாதங்களுக்கு முன்பு, சேதன் சக்காரியாவின் சகோதரர் ராகுல் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது தந்தையும் இறந்துபோனது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எளிய குடும்பத்திலிருந்து வந்த சேதன் சகாரியா இந்த ஆண்டு நடந்த சையது முஷ்தாக் அலி டி-20 தொடரில், 5 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார். அவரது இந்தச் செயல்பாடு பிடித்துப்போக 1.2 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.  கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐபிஎல் மூலம் கிடைத்த வருவாயால்தான் தந்தைக்கு சிகிச்சையளிக்க முடிந்தது. கிரிக்கெட் ஊதியமே எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் என கூறியிருந்தார் சக்காரியா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.