மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் கொரோனாவால் உயிரிழந்த கணவரின் பிரிவை தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள ஷால்பி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது கணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது பிரிவை தாங்க முடியாமல் அதே மருத்துவமனையில் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது மனைவி.
“உயிரிழந்த பெண்ணின் பெயர் குஷ்பு. அவருக்கு 37 வயதாகிறது. அவரது கணவர் ராகுல் இந்த மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் உயிர் இழந்துள்ளார். அவரது பிரிவை தாள முடியாத அதிர்ச்சியால் குஷ்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)