காயத்ரி மந்திரம் உச்சரித்தால் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து மீண்டு வரமுடியுமா என்பது தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய அரசு நிதி ஒதுக்கிடு செய்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சாதாரண அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். அதில் ஒரு பிரிவினருக்கு சிகிச்சையும், மற்றொரு பிரிவினருக்கு காயத்ரி மந்திரங்கள் உச்சரிக்க வைப்பது, யோகா பயிற்சி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் காயத்ரி மந்திரங்கள் உச்சரிப்பது, உடலில் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கச் செய்கிறதா? கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்துகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்கான நிதியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இதற்கு அனுமதி கோரி ஐசிஎம்ஆர் அமைப்பிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.