கொரோனா தொற்று பரவல் ஐபிஎல் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் நடைமுறை சிக்கலை உருவாக்கியது. அதனால் எஞ்சியுள்ள லீக் போட்டிகள் அனைத்தையும் மும்பை மைதானத்திற்கு மாற்ற பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ஹைதராபாத் வீரர் சஹாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த அமித் மிஸ்ராவுக்கும் வைரஸ் தொற்று உறுதியானது. 

பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியானதால் ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் எழுந்தது. தொடர் முழுவதும் நடைபெறுமா? என்ற சந்தேகம் படர்ந்த சூழலில் ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி நடப்பு சீசனை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் லீக் போட்டிகள் அனைத்தும் நடைபெறுமா? அல்லது வேறு ஏதேனும் உக்தி கையாளப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

கொரோனா காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரால் பிசிசிஐ-க்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்சர்ஷிப் முதலியவற்றில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

“பாதியிலேயே தொடர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் 2000 முதல் 2500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்” என பிசிசிஐ வட்டாரத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

52 நாட்களில் 60 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசன் வெறும் 24 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அதிலும் 29 போட்டிகள் தான் நடந்து முடிந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக ஸ்டார் நெட்வொர்க்குடனான மேற்கொள்ளப்பட்டுள்ள 5 ஆண்டு ஒளிபரப்பு ஒப்பந்த்தின் மூலம் 16347 கோடி ரூபாய். ஆண்டுக்கு 3269.4 கோடி ரூபாய். ஒரு சீசனில் 60 போட்டிகளும் நடந்தால் ஒரு போட்டிக்கு 54.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். தற்போது அதில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 29 போட்டிகள் மூலம் 1580 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படாமல் போனால் 1690 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். 

இதே போல டைட்டில் ஸ்பான்சர் தொடங்கி அனைத்திலும் இழப்பு தான். மறுபக்கம் வீரர்களின் ஊதியத்திலும் சிக்கல்கள் ஏற்படலாம் என தெரிகிறது. வீரர்கள் தாமாக தொடரிலிருந்து விலகினால் மட்டுமே அவர்களது பங்களிப்புக்கு ஏற்ற படி ஊதியம் கொடுக்கப்படும். அதனால் ஒவ்வொரு அணிகளும் தங்கள் வீரர்களுக்கு ஊதியத்தில் 50 சதவிகிதம் கொடுக்க வேண்டி உள்ளது. இப்படி பல பாதிப்புகளை ஐபிஎல் நிர்வாகம் எதிக்கொள்கிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.