கொரோனா தொற்றின் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய சொல்லியது. குறிப்பாக மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த நிறுவனங்கள் Work From Home பாலிசியை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை தலைமையிடமாக கொண்டு வரும் மென்பொருள் நிறுவனமான Atlassian தங்கள் ஊழியர்கள் ஆண்டுக்கு நான்கு முறை அலுவலகம் வந்தால் போதும் என தெரிவித்துள்ளது. 

“டீம் Anywhere என்ற கொள்கையின் மூலம் இதனை செயல்படுத்த உள்ளோம். எங்களது நிறுவனம் சர்வதேச நிறுவனமாகும். அதனால் பணியாளர்களின் திறனானது உலகின் எந்த இடத்தில் அவர்கள் இருந்தாலும் வெளிப்படும் என்பதை திடமாக நம்புகிறோம். சிலிக்கான் வேலியில் இருந்து தான் இந்த பணிகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என கருதுகிறோம். அதனால் உலகின் எந்தபகுதியில் இருந்தும் எங்கள் ஊழியர்கள் பணியாற்றலாம். ஆண்டுக்கு நான்கு முறை மட்டும் அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள எங்கள் அலுவலகத்திற்கு அவர்கள் வருகை தந்தால் போதும்” என சொல்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஃபர்குவார். 

image

இப்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் ‘நம்ம முதலாளி! தங்க முதலாளி!’ என முணுமுணுத்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.