நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 3000 கைதிகளை விடுவிக்க ஜிம்பாப்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதிகளின் நன்நடத்தை மற்றும் பொது மன்னிப்பின் கீழ் இந்த நடவடிக்கையை ஜிம்பாப்வே மேற்கொள்ள உள்ளதாம். அதன்படி கைதிகளை அரசு விடுவிக்க உள்ளதாம்.
இதில் முதற்கட்டமாக நாட்டிலேயே உள்ள பெரிய சிறைச்சாலையில் இருந்து 320 கைதிகளை அரசு விடுவித்து உள்ளதாம். ஜிம்பாப்வேவில் மொத்தம் 46 சிறைச்சாலைகள் உள்ளன. அதில் மொத்தம் 17000 கைதிகளை அடைக்கலாம். ஆனால் தற்போது 20000 பேர் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனராம். அதனால் இந்த நடவடிக்கையை அரசு எடுக்க உள்ளதாம்.
மொத்தமாக இதுவரை 37534 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.