கேரளா மாநிலம் மலப்புரத்தில் வளர்ப்பு நாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்ததால் ஆத்திரமடைந்த உரிமையாளர் நாயை ஸ்கூட்டரில் 3 கிலோ மீட்டர் தூரம் கட்டி இழுத்து சென்ற கொடூரம் நிகழ்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

image

கேரளா மாநிலம் பெருங்குளம் பகுதியிலுள்ள இடக்கரையில் வளர்ப்பு நாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்ததால் ஆத்திரமடைந்த உரிமையாளர் நாயை ஸ்கூட்டரில் கட்டி 3 கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளார்.

இதை பார்த்த ஒருவர் ஸ்கூட்டரை பின் தொடர்ந்து சென்ற போதும் அவர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் 3 கி.மீ தூரம் வரை நாயை கட்டி இழுத்து சென்றுள்ளார். பின்னர் அவர் ஸ்கூட்டரிலிருந்து நாயை அவிழ்த்துவிட்டுள்ளார். நாயின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

image

இதுகுறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த வீடியோவை யார் எடுத்தாரென்று தெரியவில்லை. நாயை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்றவர் பற்றிய விபரமும் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.