கனடா நாட்டின் சஸ்காட்செவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ, கடந்த ஆண்டு இந்தியா நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த சூழலில் கனடா மாகாணமான சஸ்காட்செவனின் முதல்வர் ஸ்காட் மோ, “வளர்ச்சி மாற்றத்துடன் மட்டுமே வருகிறது, மாற்றம் எப்போதும் எளிதானது அல்ல. வளர்ச்சி சிறந்த வாய்ப்பைக் கொண்டுவருகிறது ” என தெரிவித்தார்.
இந்தோ–கனடா சேம்பர் ஆஃப் காமர்ஸ் (ஐ.சி.சி.சி) ஏற்பாடு செய்த வெபினாரில் பங்கேற்றபோது அவர் இந்த கருத்தை தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் “2012 ஆம் ஆண்டில் கனடிய கோதுமை வாரியம் ஒழிக்கப்பட்ட போது, இந்தியாவில் தற்போது நிலவுவது போன்ற எதிர்ப்பு அப்போது கனடாவிலும் நிலவியது. இந்தியாவில் வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு முறையை போலவே, அப்போது மேற்கு கனடாவில் சஸ்காட்செவன் உட்பட பல மாகாணங்களில் இதுபோன்ற குழுக்கள் பொருட்களின் மீது ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தது.
ஆரம்ப நிச்சயமற்ற தன்மை கொண்ட சீர்திருத்தம் பின்னர் இந்த மாகாணங்களில், குறிப்பாக சஸ்காட்செவனில் விவசாயத் துறையின் புரட்சிகர மாற்றத்திற்கு வழிவகுத்தது, இது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தொடர்ச்சியான மற்றும் அதிவேக உயர்வுக்கு வழிவகுத்தது. இதனால் தற்போது சஸ்காட்செவனின் தானிய ஏற்றுமதி கிட்டத்தட்ட 17 பில்லியனைத் தொட்டு அதிவேகமாக உயர்ந்து வருகிறது ” என தெரிவித்தார்