சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மேலும் ஓரிரு மணி நேரங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்த நிலையில் இன்று அதிகாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, விருகம்பாக்கம், ஆலந்தூர், ராமாபுரம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பம்மல் பகுதியில் இடியுடன் கூடிய பெய்த கனமழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.