தமிழக பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டியிட விரும்பும் இடங்கள் தொடர்பாக அதிமுகவுடன் அக்கட்சி ஆலோசனையில் ஈடுபட்டது.

எந்தெந்த தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டுப் பெறலாம் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தனியார் நட்சத்திர ஹோட்டலில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

image

அவை எந்த எந்த தொகுதிகள் என்பதை அதிமுகவிடம் கேட்டு பெற எல்.முருகன், சிடி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை ஆகியோர் தி.நகர் பாஜக அலுவலகத்தில் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து சென்னை லீலா பேலஸில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன், சி,டி.ரவி, அண்ணாமலை ஆகியோர் அதிமுக சார்பில் கேபி.முனுசாமி, வைத்தியலிங்கம், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி ஆகியோர் பாஜக குழுவுடன் ஆலோசனை நடத்தினர். இதில் சில தொகுதிகளை, அதிமுகவின் கூட்டணி கட்சிகள் அனைவரும் கேட்பதால் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல் சென்னை, கோவையில் பாஜக சில தொகுதிகளை கேட்பதால், பேச்சுவார்த்தை மூலம் யாருக்கு எந்த எந்த தொகுதிகள் வழங்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.