பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே நின்றிருந்த காரில் பயங்கர வெடிபொருள் கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு, ‘அண்டிலியா’ என்ற பெயருடன் மும்பையில் பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்று உள்ளது.

image

இந்நிலையில் நேற்று அந்த பங்களாவிற்கு வெளியே சந்தேகத்துக்கு இடமான சொகுசு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மும்பை போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், மர்ம வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஷம்புராஜ் தேசாய், சம்பவம் குறித்து  உரிய விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.