இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணி இங்கிலாந்து வெற்றி பெற 482 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் வெறும் 19 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ் மற்றும் டாம் சிப்லே என இருவரும் இந்திய பந்து வீச்சாளர்கள் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தனர். 

நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஜேக் லீச்சும் டக் அவுட்டானார். தற்போது கேப்டன் ரூட்டும், லாரன்சும் களத்தில் உள்ளனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 53 ரன்களை எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. 


இங்கிலாந்து அணி இந்த போட்டியை டிரா செய்ய எஞ்சியுள்ள இரண்டு நாட்கள் முழுவதும் விளையாடியாக வேண்டும். இங்கிலாந்து அதை செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பில் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளும், அஷ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.