சீனாவின் வூகான் நகரில் உள்ள பரிசோதனை மையத்தியிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், 2020 ஆம் ஆண்டு முழுவதும் உலகையே ஆட்டிப்படைத்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், சீனாவின் வூகான் நகரில் உள்ள வைரஸ் சோதனை மையத்தலிருந்து கொரோனா வைரஸ் பரவவிடப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் சீனாவில் முகாமிட்டு ஆய்வு நடத்தினர்.
இந்நலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்புத்துறை துறை அதிகாரி பீட்டர் பென் எம்பரெக், வூகான் நகரில் உள்ள பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை என்றார். தங்களது ஆய்வின்போது சீன அரசு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், அவர் கூறினார். மேலும், 2019 ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்றும் தெரிவித்தார்.