இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் இந்திய கேப்டன் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
கடைசியாக 2016 – 17 சீசனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பூனே டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல கோலியின் தலைமையின் கீழ் இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட், ஆஸ்திரேலியா (1 டெஸ்ட்) மற்றும் இங்கிலாந்து (1 டெஸ்ட்) என நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
ENGLAND WIN ?
An all-round performance by the visitors has given them a 227-run victory over India.
The lead the four-test series 1-0!#INDvENG ➡️ https://t.co/gnj5x4GOos pic.twitter.com/luS7HAcWIm
— ICC (@ICC) February 9, 2021
இந்திய அணி இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளையும் கவனத்துடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.