சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை முழுமையாக நிறைவு செய்துள்ள சசிகலா இன்று பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்புகிறார். கார் மூலம் அவர் சென்னைக்கு திரும்புகிறார்.
இந்நிலையில் அவரது காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக மருத்தவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் ஆகும்போது அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையானது. இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பறக்கிறது.
அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில்தான் சசிகலா சென்னை திரும்புகிறார்.