விவசாய சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீடு திரும்ப மாட்டார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்
உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் டெல்லி தவிர பல மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இன்று தங்கள் ‘சக்கா ஜாம்’ எனும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்கள். விவசாய சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீடு திரும்ப மாட்டார்கள், மேலும் மத்திய அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழுத்தமும் கொடுக்க மாட்டோம் என்று பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கைட் சக்கா ஜாம் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கூறினார்.
டெல்லி–உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் கூடியிருந்த விவசாயிகளிடம் உரையாற்றிய டிக்கைட், விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறைக்குப் பின்னர் கண்ணீருடன் முறையிட்டது எதிர்ப்பாளர்களை மீண்டும் உத்வேகம் கொள்ளசெய்துள்ளது என்று கூறினார். “சட்டங்களை ரத்து செய்ய அக்டோபர் 2 ஆம் தேதி வரை நாங்கள் அரசாங்கத்திற்கு அவகாசம் அளித்துள்ளோம். இதன் பின்னர், நாங்கள் மேலும் திட்டமிடல் செய்வோம். அரசாங்கம் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் அழுத்தம் கொடுக்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.